சென்னை: இந்தியா முழுவதும் இருந்து 2,996 கராத்தே வீரர்கள் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து கராத்தே சாகசங்களை செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கம் சார்பில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்கும் வகையில், ஒரே இடத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் ஒருங்கிணைந்து, கராத்தே நுட்பங்களை தொடர்ந்து 30 நிமிடங்கள் நடுவர்கள் முன்பு செய்து காட்டும் நிகழ்வு சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்.8-ம் தேதி நடைபெற்றது. இதில் கராத்தே பயிலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.