ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தது முதல் பாஜ அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

2 months ago 9

சென்னை: சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று அளித்த பேட்டி: ஒன்றியத்தில் பாஜ தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறது. மேலும், 2006ம் ஆண்டு முதல்வராக ஜெயலலிதா இருந்த போது தான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டிய இட ஒதுக்கீடு குறித்து ஓய்வுபெற்ற நீதியரசர் ஜனார்தனன் தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டு இஸ்லாமியர்களுக்கான 3 புள்ளி இட ஒதுக்கீடு, 5விழுக்காடாக பரிந்துரைக்கப்பட்டது. அதற்கடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வந்த திமுக அதனை நடைமுறைப்படுத்தியது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தது முதல் பாஜ அரசு இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது: ஜெயக்குமார் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article