சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய அரசமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்பை தலைவராக கொண்டு ஒரு குழுவை முதல்வர் அமைத்துள்ளார்.
மாநில உரிமைகளை மீட்பதிலும், மாநிலங்கள் மீது ஒன்றிய அரசு மேற்கொள்ளும் முரட்டுத்தனமானத் தாக்குதலை தடுத்து நிறுத்துவதிலும் இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய மாநில அரசுகளின் உறவுகளை மீட்டெடுத்து மேம்படுத்துவதிலும் நிச்சயம் சாதனை படைப்பார்.
The post ஒன்றிய, மாநில அரசுகளின் உறவுகளை மீட்டெடுப்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சாதனை படைப்பார்: பொன்குமார் அறிக்கை appeared first on Dinakaran.