கரூர், பிப். 25: கரூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மின்சாரதுறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல்,மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என மிரட்டி இந்தி மொழியை திணிக்க முற்படுகிறது. இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக இன்று (25ம் தேதி) மாவட்ட திமுக, திமுக மாணவர் அணி மற்றும் மாணவ கூட்டமைப்பு சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகர திமுக, மாநகர பகுதி கழக, ஒன்றிய, நகர, பேரூர் கழக, வார்டு அணி செயலாளர்கள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
The post ஒன்றிய அரசை கண்டித்து திமுக மாணவரணி கரூரில் இன்று ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.