தொண்டியில் படகுகள் ஆய்வு

3 hours ago 3

 

தொண்டி, மே 26: கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் ஆய்வு செய்ய உள்ளதாக மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.தொண்டி முதல் ஆற்றங்கரை வரை உள்ள அனைத்து விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் ஆய்வு செய்ய உள்ளதாகவும், மீனவர்கள் தங்கள் படகுகளை தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மீன் வளத்துறை அதிகாரிகள் கூறியது, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு படுத்தும் சட்டத்தின் படி ஆண்டுதோறும் படகுகள் ஆய்வு நடைபெறும். 78 விசைப்படகுகளுக்கு மே 30ம் தேதி, 2200 நாட்டுப் படகுகளுக்கு ஜூன் 3ம் தேதி ஆய்வு நடைபெற உள்ளது. ஆய்வின் போது படகு பதிவு குறித்த ஆவணங்கள், தொலை தொடர்பு கருவிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆய்வுக்கு உட்படாத படகுகளுக்கு மானிய டீசல் நிறுத்தப்படும் என்றனர்.

The post தொண்டியில் படகுகள் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article