ஒன்றிய அரசின் வக்ப் சட்டத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

3 months ago 9

 

புதுக்கோட்டை, பிப்.15: ஒன்றிய அரசின் வக்ப் சட்டத்தை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கடைவீதியில் உள்ள பெரிய பள்ளிவாசல் முன்பு நேற்று ஜும்மா தொழுகை முடிந்து வெளியே வந்த எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வக்ஃப் சட்ட நகலை கிழித்தெறிந்து எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத்தை தாக்கல் செய்துள்ளது. இதற்கு இஸ்லாமியர்கள் பலரும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கடைவீதியில் உள்ள பெரிய பள்ளிவாசல் முன்பு வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை முடிந்து வெளியே வந்த எஸ்டிபிஐ கட்சியினர் கையில் ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஒன்றிய அரசின் வக்ஃப் சட்ட நகலை கிழித்தெறிந்து எரிக்க முயன்ற போது காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஒன்றிய அரசின் வக்ப் சட்டத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article