ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல்.: மீண்டும் நடைபெறுவது எப்போது..?

8 hours ago 1

மும்பை,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 58 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 12 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

இதனிடையே தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக ஐ.பி.எல். நடப்பு சீசனை தற்காலிகமாக நிறுத்தி வைக்க பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது. இருப்பினும் ரத்து செய்யவில்லை. இதனால் நடப்பு ஐ.பி.எல். தொடர் மீண்டும் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட 18-வது ஐ.பி.எல். தொடரை எதிர்வரும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் நிறைவடைந்தவுடன் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மீண்டும் நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article