ஐபிஎல்: கொல்கத்தா அணியில் இருந்து விலகிய மொயீன் அலி

4 days ago 3

பெங்களூரு,

இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. அன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

இந்த நிலையில் , கொல்கத்தா அணியில் முக்கிய வீரர்களில் ஒருவரான மொயீன் அலி மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் . தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியுள்ளார் . இது கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

Read Entire Article