*6 பக்க கடிதம் சிக்கியது
திருமலை : தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வர் ரெட்டி. இவரது மனைவி தேஜா(35). தம்பதியினருக்கு மூத்த மகன் ஹர்ஷித்(11), இளைய மகன் ஆஷிஷ்(9). இவர்கள் அனைவரும் அதேபகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் தேஜா தனது மகன்களை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, பின்னர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். குடியிருப்பில் ஆய்வு செய்தபோது, மகன் ஹர்ஷித்தும் கழுத்து அறுத்த நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆஷிஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது, தேஜா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு எழுதிய 6 பக்க கடிதத்தை கண்டுபிடித்தனர். அந்தக் கடிதத்தில், தனது கணவர் வெங்கடேஸ்வர ரெட்டி மீது தனக்கு கோபம் இருக்கிறது. கடுமையான மன அழுத்தத்தில் இருந்தேன்.
எனக்கு கண் தொடர்பான பிரச்னை உள்ளது. குழந்தைகளின் உடல்நிலையும் சரியில்லை. இதை எனது கணவர் கண்டுகொள்ளாமல் உள்ளார். மேலும் தேஜாவின் குடும்பத்ததால் இருந்த உளவியல் மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இந்த கொடூர சம்பவத்தில் ஈடுப்பட்டேன் என குறிப்பிடப்பட்டிருந்தது.
The post ஐதராபாத்தில் பயங்கரம் 2 மகன்களை கொன்று மாடியில் இருந்து குதித்து தாய் தற்கொலை appeared first on Dinakaran.