ஐ.பி.எல்.பிளே ஆப் 2025: எந்தெந்த அணிகள் எப்போது மோத உள்ளன..? முழு விவரம்

1 month ago 11

சென்னை,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை நெருங்குகிறது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரின் 70 ஆட்டங்கள் கொண்ட லீக் சுற்று நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றி பெற்றது.

இதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. பிளே ஆப் சுற்று நாளை தொடங்க உள்ளது.

அதன்படி நாளை இரவு 7.30 மணிக்கு முல்லான்பூரில் நடைபெறும் குவாலிபயர் 1 ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் 2-வது இடம் பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோல்வியடையும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உண்டு.

The playoffs battles are set! Get ready for the final frontier #TATAIPL | #LSGvRCB pic.twitter.com/hW7ocjr871

— IndianPremierLeague (@IPL) May 27, 2025

இதனையடுத்து 30-ந் தேதி இரவு 7.30 மணிக்கு இதே மைதானத்தில் நடக்கும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் 3-வது இடம் பெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் 4-வது இடம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

பின்னர் ஜூன் 1-ந் தேதி நடைபெறும் குவாலிபயர் 2 ஆட்டத்தில் எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்ற அணியும்,குவாலிபயர் 1 ஆட்டத்தில் தோல்வியடைந்த அணியும் நேருக்கு நேர் மோதும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

4⃣ fantastic teams 1⃣ road to glory Which teams will make the final? ✍#TATAIPL | #TheLastMile pic.twitter.com/99dOog7GBu

— IndianPremierLeague (@IPL) May 27, 2025

ஜூன் 3-ந் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. 

Read Entire Article