
லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் இன்று லக்னோவில் நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 60 ரன்களும், மார்க்ரம் 53 ரன்களும் அடித்தனர். மும்பை தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் கேப்டன் என்ற என்ற மாபெரும் சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி 2 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 13 ரன்கள் அடித்துள்ளது.