ஐ.பி.எல்.2025: இந்திய முன்னாள் வீரர் தேர்வு செய்த சிறந்த அணி.. ரோகித் சர்மாவுக்கு கவுரவம்

4 hours ago 3

மும்பை,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 3-ம் தேதி நிறைவு பெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கொண்டு பல முன்னாள் வீரர்கள் சிறந்த பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்திய முன்னாள் வீரரான நவ்ஜோத் சிங் சித்து தான் தேர்வு செய்த சிறந்த அணியை அறிவித்துள்ளார். அந்த அணிக்கு மும்பை இந்தியன்சுக்கு 5 முறை கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்து கவுரவித்துள்ளார்.

இருப்பினும் அந்த அணியில் இந்த சீசனில் அதிக ரன் குவித்த சாய் சுதர்சன், சுப்மன் கில் ஆகியோரை தேர்வு செய்யாமல் ஆச்சரியமளித்துள்ளார்.

நவ்ஜோத் சிங் சித்து தேர்வு செய்த ஐ.பி.எல்.2025 அணி: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஜோஸ் பட்லர், ஸ்ரேயாஸ் ஐயர், நிக்கோலஸ் பூரன், ஹர்திக் பாண்ட்யா, குருனால் பாண்ட்யா, நூர் அகமது, பிரசித் கிருஷ்ணா, ஜஸ்பிரித் பும்ரா, ஜோஷ் ஹேசில்வுட். 

Read Entire Article