
மும்பை.
வாரத்தின் முதல் நாளான இன்று திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்தியா-பாகிஸ்தான் போர் மூளும் சூழ்நிலை நிலவி வரும்போதும் இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது.
அதன்படி, 289 புள்ளிகள் ஏற்றம்பெற்ற நிப்டி 24 ஆயிரத்து 328 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 768 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 4732 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
255 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பின் நிப்டி 26 ஆயிரத்து 291 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 1,005 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 80 ஆயிரத்து 218 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
229 புள்ளிகள் அதிகரித்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 200 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 949 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 63 ஆயிரத்து 192 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.