அயோத்தியாப்பட்டணம்: சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த சின்னகவுண்டாபுரம் ஒட்டப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(35), கொத்தனார். இவரது மனைவி சந்தியா(28). இவர்களது மகன்கள் தர்ஷன்(8), விஷால்(7). இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முறையே 3, 2ம் வகுப்பு படித்து வந்தனர். அதே பகுதியில் உள்ள சந்தனபுடையார் ஏரியில், நண்பர்களுடன் மீன்பிடிப்பதற்காக, நேற்று மதியம் 3 மணியளவில் சென்றனர்.
அப்போது, ஏரியில் உள்ள பள்ளத்தில் விஷால் தவறி விழுந்தான். அவனை காப்பாற்ற முயன்ற தர்ஷனும் பள்ளத்தில் விழுந்தான். தகவலறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று, ஏரியில் மூழ்கிய இருவரையும் தேடினர். மாலை 6 மணியளவில் இருவரையும் சடலமாக மீட்டனர். மகன்கள் இருவரையும் ஒரே நாளில் இழந்த பெற்றோர் கதறி அழுதனர்.
The post ஏரியில் மீன் பிடித்த அண்ணன், தம்பி நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.