“ஏமாற்றப்படும் நடுத்தர மக்கள்!” - சென்னையில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டத்தில் டி.ராஜா ஆவேசம்

2 hours ago 2

சென்னை: “மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு விரோதமானது. எனவே, அதை நிராகரிக்க வேண்டும்” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தி உள்ளார்.

மத்திய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் சென்னை, பாரிமுனையில் இன்று நடைபெற்றது. கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் போராட்டத்துக்கு தலைமை வகித்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா பட்ஜெட் நகலை எரித்து போராட்டத்தை தொடங்கி வைத்து பேசியது: “மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு விரோதமானது.

Read Entire Article