சென்னை: ஏடிஜிபி கல்பனா நாயக் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்திருந்த நிலையில் நாசவேலை காரணமல்ல என்று டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். ஏடிஜிபி கல்பனா நாயக்கின் அறை தீக்கிரையான விவகாரத்தில் சதி திட்டம் ஏதும் இல்லை. அறையில் வேண்டுமென்றே தீ வைப்புச் செயல் எதுவும் நடைபெறவில்லை. துறைரீதியாக முறையான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அறையின் செம்பு கம்பிகளில் ஷார்ட் சர்க்யூட் இருப்பதற்கான சான்றுகள் காணப்பட்டதாக தடயவியல் நிபுணர்கள் அறிக்கை அளித்துள்ளனர்
The post ஏடிஜிபி கல்பனா நாயக் அறையில் மின் வயரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத்தான் தீ விபத்து நடந்துள்ளது: காவல்துறை விளக்கம் appeared first on Dinakaran.