எழுத்தாளர் ராஜ் கௌதமன் மறைவுக்கு தமிழக முதல்வர், தலைவர்கள் இரங்கல்

2 months ago 11

திருநெல்வேலி: தமிழ் பண்பாட்டு ஆய்வாளரும், எழுத்தாளருமான பேராசிரியர் ராஜ் கௌதமன் (74) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், இலக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புஷ்பராஜ் என்ற இயற்பெயர் கொண்ட ராஜ் கௌதமன், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள புதுப்பட்டியில் பிறந்தவர். அங்கு தொடக்கக் கல்வியும், மதுரையில் மேல்நிலைக் கல்வியும் முடித்த அவர், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம், அண்ணாமலை பல்கலை.யில் சமூகவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

Read Entire Article