சென்னை: எலான் மஸ்க் வீடியோக்களை பயன்படுத்தி கிரிப்டோ நிதி மோசடிகள் நடைபெற்று வருவதாக மக்களுக்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் சமூக ஊடகங்களில் எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி என்பவர் கிரிப்டோ நாணய முதலீட்டுகளை ஆதரிக்கிறார் என தவறானத் தகவல்களை பரப்பும் போலியான விளம்பரங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த மோசடிகள் எலான் மஸ்க், அவருடைய தந்தை எரோல் மஸ்க் ஆகியோர் அளித்த பேட்டிகளை எடிட்டிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தவறாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி பொது மக்கள் முதலீடு செய்ய முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில், சைபர் கிரைம் போலீசார் 26 போலியான Instagram முகவரிகள் மற்றும் 14 போலியான இணையதளங்களை கண்டறிந்து, அவற்றை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதில், எலான் மஸ்க் எந்தவொரு கிரிப்டோ முதலீட்டு செயலியை அல்லது இணையதளத்தையும் ஆதரிக்கவில்லை. அதிக இலாபம் உறுதி அளிக்கும் வாய்ப்புகள் – நம்பகத்தன்மையற்றவை. பிரசித்திபெற்ற நபர்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் – தன்னிச்சையாக உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம். மூலமற்ற இணையதள முகவரிகள், செயலிகள் – பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.
* தகவல்களை அரசு அல்லது நிதி ஒழுங்குமுறை அமைப்புகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் சரிபார்க்கவும்.
* அறியாத இணையதளங்களுக்கு தனிப்பட்ட மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களை பகிர வேண்டாம்.
* மட்டும் தான் பதிவுசெய்யப்பட்ட மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட கிரிப்டோ பரிமாற்றங்களை பயன்படுத்தவும்.
* சைபர் மோசடிக்குள்ளானவர்கள் 1930 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கலாம்.
* அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
இது தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விழிப்புணர்வு அறிவிப்பு.
இதே போன்ற மோசடி நடவடிக்கைகளில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கவும். சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930-யை அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in இல் புகார் பதிவு செய்யவும் அறிவுறுத்தினர்.
The post எலான் மஸ்க் வீடியோக்களை பயன்படுத்தி மோசடி : மக்களுக்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலிஸ் எச்சரிக்கை appeared first on Dinakaran.