தஞ்சாவூர்: அதிமுக -பாஜக கூட்டணி வாக்குகளை பிரிக்க விஜய் மூலம் திமுக சதி செய்கிறது என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வளவன்புரத்தில் வராஹி அம்மன் கோயிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று நடைபெற்ற சத்ரு சம்ஹார யாகத்தில் கலந்துகொண்ட அர்ஜுன் சம்பத், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதம் அழியவும், நமது நாட்டின் ராணுவம் வலிமை பெறவும், யுத்தத்தில் வெற்றி பெறவும் தெய்வ பலம் எப்போதும் அவசியம் என்பதால், சத்ரு சம்ஹார யாகம் நடத்தி உள்ளோம்.