எலச்சிபாளையத்தில் மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

2 months ago 10

திருச்செங்கோடு, நவ.21: திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் அடுத்த மாரப்பம்பாளையத்தில், பொது பாதையில் தனி நபர் மரங்களை போட்டு அடைத்து வைத்திருப்பதை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் சென்று வந்த பாதையில், ஏற்படுத்தப்பட்டுள்ள தடையை அகற்றி, அவர்கள் மீண்டும் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நிர்வாகி ரவி தலைமை வகித்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள், மேற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் ஈஸ்வரன், சத்யா நகர் கிளை செயலாளர் ரவி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ராதிகா நன்றி கூறினார். கிராம நிர்வாக அலுவலர் தீபன்ராஜ் வசம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

The post எலச்சிபாளையத்தில் மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article