அமைதிக்கு பேர் போன செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியமைக்காக அன்னூர் கஞ்சப்பள்ளியில் நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்திருப்பது அதிமுக-வுக்குள் பெரும் விவாதத்தை எழுப்பி இருக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, ‘இந்து தமிழ் திசை’க்கு செங்கோட்டையன் அளித்த நேர்காணலில், “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை இணைப்பது தொடர்பான பேச்சு நடக்கிறது” என உறுதிப்படுத்தியதுடன், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் - இபிஎஸ்சை சந்தித்தது உண்மைதான் என்பதையும் தெளிவுபடுத்தினார்.