எம்எல்ஏ வீட்டை தாக்கியபோது ரூ.1.5கோடி நகைகள் கொள்ளை

3 months ago 16

இம்பால்: மணிப்பூரில் எம்எல்ஏ வீட்டை தாக்கியபோது ரூ.1.5கோடி மதிப்புள்ள நகைகளை கும்பல் கொள்ளையடித்ததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமில் இருந்த 3 குழந்தைகள், 3 பெண்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட நிலையில், பல்வேறு சட்ட மன்ற உறுப்பினர்களின் வீடுகளை கும்பல் சேதப்படுத்தியது. பல இடங்களில் வன்முறை வெடித்தது.

இந்நிலையில் மேற்கு இம்பாலின் தங்க்மெய்பண்ட் சட்டமன்ற தொகுதியின் ஐக்கிய ஜனதா தளத்தின் எம்எல்ஏவான ஜாய்கிஷன் சிங் வீட்டின் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலின்போது அங்கிருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன. வீட்டில் இருந்த எம்எல்ஏவின் குடும்ப உறுப்பினர் ஒருவரும் காயமடைந்தார். இந்நிலையில் வீட்டை அடித்து நொறுக்கிய கும்பல் வீட்டில் இருந்து ரூ.18லட்சம் ரொக்கம், ரூ.1.5கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏவின் தாயார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post எம்எல்ஏ வீட்டை தாக்கியபோது ரூ.1.5கோடி நகைகள் கொள்ளை appeared first on Dinakaran.

Read Entire Article