கோவை: என்னை பணத்தாலோ, புகழாலோ யாராலும் அடிமைப்படுத்த முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.
கோவை, ஈரோடு, திருப்பூர் மக்களின் 60 ஆண்டுகால கனவுத்திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டம் ரூ.1,916 கோடியில், கடந்த அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரம்பி இருப்பதால் தண்ணீர் விடப்பட்டுள்ளதால் விவசாயிகள், அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.