எந்த பெண்ணையும் கன்னித்தன்மை பரிசோதனைக்கு கட்டாயப்படுத்த முடியாது: சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம் கருத்து

1 day ago 5

பிலாஸ்பூர்: எந்த பெண்ணையும் கன்னித்தன்மை பரிசோதனைக்கு கட்ாயப்படுத்த முடியாது என சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு அதே மாநிலத்தை சேர்ந்த பெண்ணுடன் கடந்த 2023ல் இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு பின் தனது கணவருக்கு ஆண்மை இல்லை என்றும் எனவே அவருடன் வாழமாட்டேன் என்று அந்த பெண் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் தனது கணவரிடம் இருந்து மாதம் ரூ.20,000 ஜீவனாம்சம் வழங்கக்கோரி கடந்த ஆண்டு ராய்கர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது மைத்துனருடன் மனைவிக்கு கள்ள தொடர்பு இருக்கிறது.எனவே தனது மனைவிக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் பெண்ணின் கணவர் சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி அரவிந்த் குமார் வர்மா விசாரித்து ஜனவரி 9ம் தேதி தீர்ப்பளித்துள்ளார். அந்த வழக்கின் தீர்ப்பில் முழு தகவல்கள் இப்போது தான் தெரியவந்துள்ளது. தீர்ப்பில் நீதிபதி கூறுகையில்,கன்னித்தன்மை பரிசோதனைக்கு அனுமதி வழங்குவது அடிப்படை உரிமைகள், இயற்கை நீதியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது. ஒரு பெண்ணை கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தவும், அவரது சாட்சியத்தில் உள்ள இடைவெளியை நிரப்பவும் அனுமதிக்க முடியாது. எந்தவொரு பெண்ணையும் கன்னித்தன்மை பரிசோதனையை நடத்த கட்டாயப்படுத்த முடியாது. இது பிரிவு அரசியல் சட்டம் பிரிவு 21 ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

The post எந்த பெண்ணையும் கன்னித்தன்மை பரிசோதனைக்கு கட்டாயப்படுத்த முடியாது: சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article