
சென்னை,
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-
2026-ல் ஒன்றிணைந்தால்தான் அ.தி.மு.க.வுக்கு வாழ்வு.. இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வுதான். எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோர் அ.தி.மு.க.வில் மீண்டும் இணைய தயாராக இருக்கிறோம்.
அமித்ஷா ஒன்றாக இருக்குமாறு எவ்வளவோ சொன்னார். எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளாததன் விளைவு தான் இதெல்லாம். தொண்டர்களால் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
செங்கோட்டையன் விசுவாசமானவர்... எந்த நிலையிலும் கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என எண்ணுபவர் அவர். செங்கோட்டையன் மீது எந்த அதிருப்தியும் எங்களுக்கு இல்லை.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு ஜெயலலிதாவை தவிர வேறு யாரும் உரிமை கோர முடியாது. மற்றபடி எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கிறாரா என்பதற்கு செங்கோட்டையன்தான் பதில் சொல்ல வேண்டும்.
அ.தி.மு.க. விதியின்படி கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். பொதுக்குழு மூலம் இந்த சட்டத்தை ரத்து செய்யவோ திருத்தவோ கூடாது'
இவ்வாறு அவர் கூறினார்.