“எத்தகைய சவால்களுக்கும் விமானப் படை தயாராக இருக்க வேண்டும்” - தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங்

7 months ago 39

சென்னை: ''தேச நலனுக்காக எத்தகைய சவால்களையும் சந்திக்க இந்திய விமானப் படை தயாராக இருக்க வேண்டும்'' என இந்திய விமானப் படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங் வலியுறுத்தினார்.

இந்திய விமானப்படை தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. அத்துடன், இந்திய விமானப் படை தொடங்கப்பட்டு 92-வது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை முன்னிட்டு, சென்னை, தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் விமானப் படை தினம் இன்று கொண்டாடப்பட்டது. முப்படைகளின் தளபதி அனில் சவுகான் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்திய விமானப் படை தலைமை தளபதி அமர் ப்ரீத் சிங் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

Read Entire Article