எதிர்க்கட்சிகளின் முழக்கத்தை தொடர்ந்து மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

2 months ago 11

டெல்லி: எதிர்க்கட்சிகளின் முழக்கத்தை தொடர்ந்து மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்துள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் 4-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். நாடாளுமன்ற வளாகத்தில் ஊர்வலமாக சென்று எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கையில் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post எதிர்க்கட்சிகளின் முழக்கத்தை தொடர்ந்து மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article