
சென்னை,
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள், செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 24, 25-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 24.6.2025, 25.6.2025 ஆகிய தேதிகளில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்டப் பொறுப்பாளர்கள்; மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.