திருச்சி: ஒருமாதத்தில் அதிகபட்சமாக ரூ.8,400 மட்டுமே ஊதியமாக பெறுவதால், குடும்பத்தை நடத்த முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகி வருவதாக ஊர்க்காவல் படை வீரர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். நாடு முழுவதும் காவல் துறையினருக்கு உதவி செய்யும் செய்யும் வகையில் 1962-ம் ஆண்டு ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் 25-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஊர்க்காவல் படை செயல்பட்டு வருகிறது. காவல் துறையில் பணிபுரிய விருப்பம் இருந்தும், அதற்கான ஆசை நிறைவேறாதபோது, பலர் ஊர்க்காவல் படையில் இணைந்து சேவை செய்து வருகின்றனர். காவல் துறையினரை போலவே இவர்களுக்கும் தனிச் சீருடை வழங்கப்படுகிறது.