உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை - பிரக்ஞானந்தா சாம்பியன்

6 hours ago 2

தாஷ்கென்ட்

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் 'நம்பர்-1' வீரர் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.

இந்தநிலையில், உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிபெக்-ஐ வீழ்த்தி கோப்பையை வென்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை 2 சுற்றுகளாக நடைபெற்ற டைபிரேக்கரில் 1.5 புள்ளிகளை பெற்று பிரக்ஞானந்தா பட்டம் வென்று அசத்தி உள்ளார்.

வரலாற்றில் முதல் முறையாக உலக செஸ் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் 2 தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர். உலக செஸ் தரவரிசையில் குகேஷை முந்தினார் பிரக்ஞானந்தா. தரவரிசையில் நான்காவது இடம் - பிரக்ஞானந்தா(2778.3), 5வது இடம் - குகேஷ்(2776.6) சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு பரிசுத்தொகையாக ரூ.17லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

Read Entire Article