திருச்செங்கோடு, பிப்.22: உலக தாய்மொழி நாளையொட்டி தாய்மொழி குறித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, திருச்செங்கோடு நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. எங்கும் தமிழ், எதிலும், எப்போதும், தமிழ் என்ற நடைமுறையை கொண்டுவர பாடுபடுவோம். தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட பரப்புரை செய்வோம். இணையற்ற தமிழுடன் இணைய தமிழையும் காத்து வளர்ப்போம் என நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு வாசிக்க, அதை நகர்மன்ற உறுப்பினர்கள் சண்முக வடிவு, சினேகா ஹரிகரன், திவ்யா வெங்கடேஸ்வரன், புவனேஸ்வரி உலகநாதன், செல்வி ராஜவேல், முருகேசன், ரமேஷ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
The post உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.