உயிருடன் இருக்கும்போது பதிவு செய்திருந்தாலே போதும்; உறவினர்களின் ஒப்புதலின்றி கண், உடலை தானம் பெறலாம்: விரைவில் சட்ட திருத்தம்

8 months ago 22

சென்னை: உயிருடன் இருக்கும்போது முறையாக பதிவு செய்தவரின் கண் மற்றும் உடலை அவரது இறப்புக்கு பிறகு அவர்களின் உறவினர்கள் ஒப்புதல் இல்லாமல் தானம் பெறும் வகையில் சட்டத்திருத்தம் வரவுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

உயிருடன் இருக்கும்போது சுயநினைவுடன் ஒருவர் தனது இறப்புக்கு பின்னர், கண்களை தானம் கொடுப்பதாக பதிவு செய்திருந்தாலும், அவர் இறந்த பின்னர், அவரது கண்களை தானம் அளிக்க பெரும்பாலான உறவினர்கள் முன்வருவதில்லை. இதனால், போதிய கண்கள் தானமாக கிடைப்பதில்லை. இதன் காரணமாக ஆண்டுதோறும் பார்வையற்றவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கண் தானம் குறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. இருப்பினும் பலன் முழுமையாக கிடைக்கவில்லை.

Read Entire Article