உதவி கேட்பது போல் நடித்து ஐ.டி ஊழியரிடம் 4 சவரன் பறிப்பு

1 month ago 7

அண்ணாநகர்: அண்ணாநகர் 15வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரோகநாத் (29), ஐ.டி நிறுவன ஊழியரான இவர், கடந்த 4ம் தேதி இரவு ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அண்ணாநகர் அருகே வந்தபோது, உதவி கேட்பது போல் இவரை வழிமறித்த 2 திருநங்கைகள், திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி, ரோகநாத் கழுத்தில் கிடந்த செயின் மற்றும் பிரேஸ்லெட் என 4 சவரன் நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பினர். புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

The post உதவி கேட்பது போல் நடித்து ஐ.டி ஊழியரிடம் 4 சவரன் பறிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article