உதகை: இந்த ஆண்டுக்கான கோடை சீசனை முன்னிட்டு மே மாதம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் 127-வது மலர் கண்காட்சிகாக சிறப்பம்சமாக 2000 தொட்டிகளில் ‘டாப்ஃபோடில்’ மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இவை மலர் கண்காட்சியின் போது காட்சிப்படுத்தப்படும்.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் கோடை சீசனை முன்னிட்டு மே மாதம் நடைபெற உள்ள 127-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு பூங்காவில் பல்வேறு பகுதிகளிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட உள்ளன.முதற்கட்டமாக நீண்ட வாழ்நாட்களைக் கொண்ட சாலிவியா, டெல்பீனியம் மற்றும் பென்ஸ்டிமன் மலர் நாற்றுகள் நடப்பட்டுள்ளது.