உச்சிப்புளி ரயில்வே கேட் திடீர் பழுது: ராமேசுவரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

4 months ago 15

ராமேசுவரம்: ராமேசுவரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி ரயில்வே கேட்டில் திடீரென பழுது ஏற்பட்டதால் ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 7.30 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உச்சிப்புளியில் ராமேசுவரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த நிலையில் இன்று (நவ.4) அதிகாலை சென்னையிலிருந்து மண்டபம் வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதற்காக, இந்த கேட் மூடப்பட்டது. ரயில் கடந்து சென்றபிறகும் கேட்டை திறக்க முடியவில்லை. இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து கேட்டை சரி செய்ய முயன்ற போது கேபிள் அறுந்து பழுது ஏற்பட்டது தெரியவந்தது.

Read Entire Article