சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால், பொன்.மாணிக்கவேல் மீதான விசாரணை ஏப். 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஐ.ஜி.யாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொன் மாணிக்கவேல். இதே பிரிவில் டிஎஸ்பியாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் காதர்பாட்ஷா. இவர் பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.