மதுரை: உசிலம்பட்டி கிருஷ்ணா விவசாய, தொழில்நுட்பக் கல்லூரியில் அனுமதியின்றி கட்டிய கட்டடங்களை இடிக்க கோரி வழக்கில், உரிய ஒப்புதல் இன்றி கட்டடம் கட்டப்பட்டிருந்தால் அதனை இடித்து அப்புறப்படுத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் பயில்வதற்கான மாற்று ஏற்பாட்டை விவசாய கல்லூரி பதிவாளர் தரப்பில் செய்து தர நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மதுரையைச் சேர்ந்த தவசி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
The post உசிலம்பட்டி கல்லூரியில் அனுமதியின்றி கட்டடம்: இடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.