உசிலங்குளத்தில் கலையரங்கம் திறப்பு

2 months ago 8

கயத்தாறு, நவ. 10: உசிலங்குளத்தில் புதிய கலையரங்கத்தை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் திறந்துவைத்தார். கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உசிலங்குளத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா, நேற்று நடந்தது. மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் ரிப்பன் வெட்டி கலையரங்கத்தை திறந்து வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இதில் கிளை செயலாளர்கள் உசிலங்குளம் கருப்பசாமி, தெற்கு இலந்தைகுளம் ஆறுமுகம், திருமங்கலம்குறிச்சி பரமசிவம், ராஜாபுதுக்குடி சதீஷ்குமார், சாலைப்புதூர் வெயில்முத்து மற்றும் ஊர் நாட்டாமை, ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post உசிலங்குளத்தில் கலையரங்கம் திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article