
மாஸ்கோ,
ரஷிய அதிபர் புதின் தலைநகர் மாஸ்கோவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ரஷியா-உக்ரைன் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதில் இந்தியாவின் பங்கு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த புதின், "பிரதமர் மோடி என்னுடைய சிறந்த நண்பர். அவருடனான சமீபத்திய பேச்சுவார்த்தைகளின்போது அவர் ரஷியா-உக்ரைன் போர் குறித்து மிகுந்த கவலை தெரிவித்தார். அவருடைய அக்கறைக்கு ரஷியா நன்றியுடன் இருக்கிறது" என கூறினார். 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகிற 22-ந் தேதி ரஷியா ரஷியா செல்லவிருக்கும் நிலையில் மோடிக்கு நன்றி தெரிவித்து புதின் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.