உ.பி.யில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் பலி

8 months ago 52

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு செல்வதற்காக இன்று காலை 4 மாணவர்கள், டிரைவருடன் காரில் புறப்பட்டனர். அப்போது அந்த கார் ரூமா-பவுண்டி மேம்பாலத்தில் வேகமாக வந்த 2 லாரிகளுக்கு இடையே சிக்கி நசுங்கியது. இதில் காரில் இருந்த 4 மாணவர்கள் உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிதைந்த காரை வெட்டி உடல்கள் வெளியே எடுத்து பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் ஆயுஷி பட்டேல், கரிமா திரிபாதி, சதீஷ் குமார் மற்றும் பிரதீக் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் (மேற்கு) ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

Read Entire Article