ஈரோடு: ஈரோட்டில் பெண் ஆசிரியர் வீட்டை ஆக்கிரமிக்க முயன்ற பள்ளி தலைமை ஆசிரியர் முத்து ராமசாமி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கந்து வட்டி மற்றும் வீட்டை ஆக்கிரமிக்க முயன்றதாக முத்து ராமசாமி மீது ஆசிரியர் ஒருவர் புகார் அளித்தார். ஆசிரியர் கொடுத்த புகாரை அடுத்து முத்து ராமசாமி மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரசு பணி நடத்தை விதிகளை மீறியதாக முத்துசாமியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
The post ஈரோட்டில் பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!! appeared first on Dinakaran.