ஈரோட்டில் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா; காங்கிரசார் கொண்டாட்டம்

2 months ago 9

 

ஈரோடு, நவ. 20: முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமை தாங்கி, இந்திரா காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா ஆகியோர் முன்னிலை விகத்து இனிப்புகளை வழங்கினர். முன்னாள் மாவட்ட தலைவரும், கவுன்சிலருமான ஈபி ரவி பங்கேற்று, மகளிருக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மண்டல தலைவர் விஜயபாஸ்கர், மகிளா காங்கிரஸ் மாநகர தலைவி ஞானதீபம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரபு, சிறுபான்மை பிரிவு பாஷா, முகமது அர்சத், நெசவாளர் அணி மாரிமுத்து, வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஈரோட்டில் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா; காங்கிரசார் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article