ஈரோடு கிழக்கில் பொது வேட்பாளர்? - அதிமுக முடிவுக்காக காத்திருக்கும் பாஜக

4 months ago 13

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. இதற்கு அதிமுக சம்மதிக்கும் பட்சத்தில், தமாகா சார்பில் பொது வேட்பாளரைக் களம் இறக்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், திமுகவின் முன்னணி பிரமுகர்களும் தொகுதியை தங்கள் கட்சிக்கு ஒதுக்க சில முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

Read Entire Article