இஸ்ரோ பணியாளர்களை ஏற்றி சென்ற பஸ் மோதி முதியவர் பலி

12 hours ago 1

பணகுடி,மார்ச் 12:நெல்லையில் இருந்து நேற்று காலை பணியாளர்களை ஏற்றிக்கொண்டு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்துக்கு பஸ் கொண்டிருந்தது. பாம்பன்குளம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் உள்ள டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த பாம்பன்குளத்தை சேர்ந்த குணசேகரன் (65), கிருஷ்ணன் (58) ஆகிய இருவர் மீதும் மோதியது.

இதில் இருவரும் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த பணகுடி போலீசார், இருவரையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குணசேகரன் இறந்தார். படுகாயமடைந்த கிருஷ்ணனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post இஸ்ரோ பணியாளர்களை ஏற்றி சென்ற பஸ் மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article