இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்: இந்திய வானிலை மையம் தகவல்

1 week ago 5

டெல்லி : இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மே 13-ம் தேதி வாக்கில் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்தது. வழக்கமாக அந்தமான் பகுதியில் மே இறுதியில் தொடங்கும் பருவமழை 2 வாரம் முன்னதாகவே தொடங்குகிறது. இந்தாண்டு 10 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்தது. இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை 5% கூடுதலாக பெய்யும் என்று ஏற்கனவே வானிலை மையம் கணித்துள்ளது.

வெயிலின் தாக்கம் குறையும் – பிரதீப் ஜான்

முன்கூட்டியே பருவ மழை தொடங்குவதால் வெயிலின் தாக்கம் குறையும் என தனியார் வானிலை மைய தலைவர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். இந்தாண்டு 10 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்தாண்டு மே மாதத்தில் வெயில் தாக்கம் பெரிய அளவில் இருக்காது.

The post இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்: இந்திய வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article