சென்னை: பால்வளம், மீன்வளத்துறை செயல்பாடுகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் அடைந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் புதிதாக 72 மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.499 கோடியில் 62,820 விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. பால் உற்பத்தி 1,446 மெ.டன் அதிகரித்துள்ளது. 350 கோடி முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் கேழ்வரகு, கொய்யா உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சியில் பாசனப் பரப்பை உயர்த்தி விளைச்சல் அதிகரித்துள்ளது
The post பால்வளம், மீன்வளத்துறை செயல்பாடுகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது: தமிழ்நாடு அரசு பெருமிதம் appeared first on Dinakaran.