சைதாப்பேட்டை தொகுதியில் தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் 154 மகளிருக்கு ஆட்டோக்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சி.வெ. கணேசன் ஆகியோர் வழங்கினர்.
சென்னை சைதாப்பேட்டையில் 154 மகளிர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியத்துடன் கூடிய ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் காரப்பாக்கம் கணபதி, எஸ்.அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர்கள் கிருஷ்ண மூர்த்தி, துரை ராஜ், மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஸ்ரீதரன், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.