இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்: ஆட்டோ ஓட்டுநர் கைது

1 month ago 8

 

மண்டபம், டிச.7: மண்டபம் அருகே, இலங்கைக்கு கடத்த முயன்ற 150 கிலோ கடல் அட்டையை தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டை கடத்தப்போவதாக, தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மண்டபம் தனிப்பிரிவு போலீசார், கடலோரப் பகுதியில் கண்காணித்து வந்தனர்.

அப்போது மரைக்காயர் பட்டிணம் வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரணை நடத்தினர். பின்னர் ஆட்டோவில் சோதனை செய்ததில், ‘பிளாஸ்டிக் கேன்களில் உயிருடன் கடல் அட்டைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர், மண்டபம் மரைக்காயர் பட்டிணம் பகுதியைச் சேர்ந்த சக்தி (22) என்பதும், இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.2 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ கடல் அட்டையை கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இடையடுத்து கடல் அட்டை மற்றும் ஆட்டோ, ஓட்டுநரை மண்டபம் வனச்சரக அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வனச்சரக அதிகாரிகள் வழக்குப்பதிந்து ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்: ஆட்டோ ஓட்டுநர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article