ராமேசுவரம்: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 123 படகுகளுக்கு ரூ.6.74 கோடி நிவாரணம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த 24.01.2018 அன்று வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளை திரும்ப பெறுவதற்கு, அந்நாட்டு நீதிமன்றத்தில் படகின் உரிமையாளர் ஆஜராகி ஆவணங்களை சமர்பித்து வாதிட்டால் படகு விடுவிக்கப்படுகிறது. இல்லை என்றால் படகுகளை இலங்கை நீதிமன்றங்கள் நாட்டுடைமையாக்கி விடுகின்றன.