சென்னை : “இரும்புக் காலத்தின் முன்னோடி தமிழ்நாடு என்பது போல் ஊழலை இரும்புக்கரம் கொண்டு ஒழித்து முன்னோடியாவோம்” என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சிறையில் உள்ள பக்ரூதின் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது. சிறைக் கைதிகளுக்கு எதிராக காட்டும் கடுமையை, ஊழலை ஒழிப்பதிலும் காட்ட வேண்டும் என்றும் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளே தவறிழைப்பவர்களாக மாறி விடக்கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
The post “இரும்புக் காலத்தின் முன்னோடி தமிழ்நாடு என்பது போல் ஊழலை இரும்புக்கரம் கொண்டு ஒழித்து முன்னோடியாவோம்” : ஐகோர்ட் appeared first on Dinakaran.